தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலையொட்டி சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் கடந்த 8ம் தேதி விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் மாநகராட்சிக்கு உட்பட்ட பொது பெண்கள் வார்டுகளை பொது வார்டாக மாற்றி இடஒதுக்கீடு செய்து அறிவித்ததை அடுத்து திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட 12வது பொது வார்டில் போட்டியிடுவதற்காக பகுதி துணை செயலாளர் M.V.குமார் Ex.Mc தனது விருப்ப மனுவை பகுதி செயலாளர் G.துக்காராம் அவர்களிடம் வழங்கினார். அருகில் வேலு Ex.Mc , M.S.பொன்ராஜ் , S.பாக்கிய மணி உட்பட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் உடனிருந்தனர்.
PUBLIC NEWS TV TAMIL - திருவொற்றியூர் 12வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட M.V.குமார் விருப்ப மனு அளித்தார்.

PUBLISHED:20-Jan-2022